Herbal Tea
NAAVAL KOTTAI TEA/நாவல் கொட்டை டீ 50GM
60.00
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்காத நிலையில் அதிகரிக்கும் நீரிழிவை கட்டுப்படுத்த இன்சுலின் மருந்துகளும், மாத்திரைகளும் உதவுகின்றன. ஆனால் அறிவியலும் உணவு முறையில் நீரிழிவை கட்டுக்குள் வைக்க முடியும் என்பதை அறிவுறுத்துகிறது. அந்த வகையில் நீரிழிவை கட்டுக்குள் வைக்க நாவல் பழங்கள் உதவுவதாக ஆய்வுகளும் நிரூபித்திருக்கிறது.
நோய்க்கான சிகிச்சை ஒரு புறம் இருந்தாலும் உணவு முறையிலும் கை வைத்தியத்திலும் பக்கவிளைவில்லாத பாதிப்பை உண்டாக்காத சிகிச்சையும் மேற்கொள்வது நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்க உதவும். அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் உணவு முறையில் நோயைக்கட்டுக்குள் கொண்டுவர நாவல் பழங்களும் அதன் கொட்டைகளும் உதவுகிறது.
இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என்று மூன்று சுவைகளும் நிறைந்த சுவையான கனி நாவல் பழம். மலைப்பிரதேசங்களில் அதிகம் காணப்படும் இந்த நாவல் பழத்தில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, எரிசத்து நிறைந்திருக்கிறது.
உடலில் ஹீமோகுளோபின் சத்து குறைவாக இருக்க உடலில் இரும்புச்சத்து குறைபாடும் காரணம். இதை நிவர்த்தி செய்ய நாவல் உதவுகிறது. எலும்புகளுக்கு வலி கொடுக்கவும் நாவல் மரம் உதவுகிறது. நீரிழிவு இருப்பவர்களுக்கு நாவல் எப்படி உதவுகிறது பார்க்கலாம்.
நாவல் பழங்கள் மற்றும் கொட்டைகள் இரண்டிலும் இருக்கும் ஜம்போலினின் மற்றும் ஜம்போசின் என்னும் குளுக்கோசைடு ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாறுவதை பொறுமையாக்குகின்றன. . இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நாவல் பழங்கள் மட்டும் அல்லாது அதன் கொட்டையும் அருமருந்தாக பயன்படுகிறது.